ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நடிகை ஹன்சிகா, கல கலப்பானவர் மட்டுமல்ல; இரக்க குணம் கொண்டவரும் கூட. நோயால் பாதிக்கப்பட்ட ஏழைகளை பார்த்தால், கண் கலங்கி விடுவாராம். அதிலும், புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பார்த்தால், உருகி விடுவார். மும்பையில், புற்று நோயால் பாதிக்கப்பட்ட, 30 குழந்தைகளுக்கு, நிதி உதவி அளித்துள்ளாராம். இப்போது, "பெண்களுக்கு ஏற்படும், மார்பக புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்தால், குணப்படுத்தி விட முடியும் என்பதை மையமாக வைத்து, மேற்கொள்ளப்பட்டுஉள்ள, விழிப்புணர்வு பிரசாரத்திலும், பங்கேற்க திட்டமிட்டுள்ளார், ஹன்சிகா. நோயால் பாதிக்கப்பட்ட சில பெண்களுக்கு, உதவுவதாகவும் உறுதி அளித்துள்ளாராம். ஹன்சிகாவின் இந்த பெருந்தன்மையை பார்த்து, அவர் நடிக்கும் திரைப்படங்களின் இயக்குனர்கள், நேரம் கிடைக்கும்போது, அவரை, விழிப்புணர்வு பிரசாரத்துக்கு செல்ல, அனுமதிக்கின்றனராம்.