மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் இரண்டு பாகங்களாக வெளிவந்து பெரும் வசூலைக் குவித்த படம் 'பாகுபலி'. அதன் அனிமேஷன் தொடர் ஏற்கெனவே வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் அதன் வெளியீடு தள்ளிக் கொண்டே வந்தது.
இந்நிலையில் இது பற்றிய அப்டேட் ஒன்றை படத்தின் இயக்குனர் ராஜமவுலி வெளியிட்டுள்ளார். 'மகிழ்மதி மக்கள் அவருடைய பெயரை உச்சரிக்கும் போது பிரபஞ்சத்தில் உள்ள எந்த சக்தியாலும் அவர் திரும்பி வருவதைத் தடுக்க முடியாது. 'பாகுபலி - கிரௌன் ஆப் பிளட்', அனிமேஷன் சீரிஸ், விரைவில்,” என சிறிய வீடியோ ஒன்றுடன் பதிவிட்டுள்ளார்.
'பாகுபலி' படம் வெளிவந்து இத்தனை ஆண்டுகள் ஆன பிறகு அனிமேஷன் தொடர் வெளிவர உள்ளது. படத்தைப் போலவே அதுவும் வரவேற்பைப் பெறுமா என்பது வெளிவந்த பிறகுதான் தெரியும்.