அதிக நேரம் ஓடும் படங்களில் 5வது இடம் பிடித்த 'குபேரா' | விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி |
ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் இரண்டு பாகங்களாக வெளிவந்து பெரும் வசூலைக் குவித்த படம் 'பாகுபலி'. அதன் அனிமேஷன் தொடர் ஏற்கெனவே வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் அதன் வெளியீடு தள்ளிக் கொண்டே வந்தது.
இந்நிலையில் இது பற்றிய அப்டேட் ஒன்றை படத்தின் இயக்குனர் ராஜமவுலி வெளியிட்டுள்ளார். 'மகிழ்மதி மக்கள் அவருடைய பெயரை உச்சரிக்கும் போது பிரபஞ்சத்தில் உள்ள எந்த சக்தியாலும் அவர் திரும்பி வருவதைத் தடுக்க முடியாது. 'பாகுபலி - கிரௌன் ஆப் பிளட்', அனிமேஷன் சீரிஸ், விரைவில்,” என சிறிய வீடியோ ஒன்றுடன் பதிவிட்டுள்ளார்.
'பாகுபலி' படம் வெளிவந்து இத்தனை ஆண்டுகள் ஆன பிறகு அனிமேஷன் தொடர் வெளிவர உள்ளது. படத்தைப் போலவே அதுவும் வரவேற்பைப் பெறுமா என்பது வெளிவந்த பிறகுதான் தெரியும்.