ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பதை குறைத்துக் கொண்டு கதைக்கும், கதாநாயகிக்கும் முக்கியத்துவம் தரும் படங்களை அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் பெண்குயின், குட்லக் சகி, சாணிக்காயிதம் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது ரிவால்வர் ரீட்டா, ரகு தாத்தா உள்ளிட்ட சில படங்களில் கதையை தாங்கி நடிக்கும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதில் ரிவால்வர் ரீட்டா படத்தில் இதுவரை ஏற்று நடத்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக நடிகர் ரெடின் கிங்ஸிலியுடன் இணைந்து காமெடியில் கலக்கியுள்ளாராம் கீர்த்தி சுரேஷ்.
சி.எஸ் அமுதன், வெங்கட் பிரபு ஆகியோரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய சந்துரு என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள கீர்த்தி சுரேஷ், “படக்குழுவினருக்கு நன்றி.. இந்த படத்தில் சில ஆச்சரியமான விஷயங்களை வைத்திருக்கிறோம்.. அனைவரையும் மனம் விட்டு சிரிக்க வைப்பதற்காக எங்களால் காத்திருக்க முடியாது” என்று கூறியுள்ளார்.