நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‛வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கூலி' படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் அறிமுக டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அனிருத் இசையமைக்கிறார்.
இந்த டீசரில் எம்.விஸ்வநாதன் இசையில் இடம்பெற்ற ‛நினைத்தாலே இனிக்கும்' பட பாடல் வரிகள் ரஜினி பேசும் வசனங்களாக இடம் பெற்று இருந்தது. அதோடு அந்த டீசரில் ரஜினியின் ‛தங்க மகன்' படத்தில் இடம் பெறும் ‛வா வா பக்கம் வா...' பாடலின் இசையும் பயன்படுத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தன்னுடைய அனுமதி இல்லாமல் வா வா பக்கம் வா பாடலின் இசையை பயன்படுத்தி இருப்பதாக கூறி, ‛கூலி' படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார் இளையராஜா. அதில் அனுமதி பெறாமல் பயன்படுத்திய அந்த பாடலின் இசையை நீக்க வேண்டும், இல்லையேல் படக்குழு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காப்புரிமை பிரச்னை தொடர்பாக சமீபகாலமாக இளையராஜா செய்து வரும் நடவடிக்கைகள் சினிமா வட்டாரத்தில் பரபரப்பையும், பேசு பொருளையும் ஏற்படுத்தி உள்ளது. இதை வைத்து இளையராஜாவை பாடலாசிரியர் வைரமுத்து மறைமுகமாக விமர்சித்தது, அதற்கு கங்கை அமரன் வைரமுத்துவிற்கு எதிராக கண்டன வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.