ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

பாலிவுட்டில் பெரிய பட்ஜெட்டில் தயாராகி வரும் படம் 'ராமாயணம்'. இந்த படம் 3 பாகங்களாக வெளிவருகிறது. இதில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய்பல்லவி சீதையாகவும் நடிக்கிறார்கள். நிதிஷ் திவாரி இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தானில் உள்ள அரண்மணை ஒன்றில் நடந்தது. இது டெஸ்ட் ஷூட் என்றும் கூறப்படுகிறது. இதில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய்பல்லவியும் நடித்தார்கள்.
இந்த படப்பிடிப்பு படங்கள் நேற்று சமூக வலைத்தளங்களில் பரவி வைரல் ஆனது. படப்பிடிப்பில் செல்போன்களை கொண்டு வரவும், பயன்படுத்தவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தும் படங்கள் கசிந்தது படப்பிடிப்பு குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. படத்தை பார்த்த நெட்டிசன்கள், சீதையாக சாய்பல்லவி பொருத்தமாக இருக்கிறார். ஆனால் ராமர் கேரக்டருக்கு ரன்பீர் கபூர் பொருத்தமாக இல்லை. அவர் முகத்தில் ராஜக்கலை இல்லை. கடைசியாக 'அனிமல்' படத்தில் ஆபாச காட்சிகளில் நடித்து விட்டு அவர் ராமராக நடிப்பதை ஏற்க முடியாது என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.