நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தற்போது 'கோட்' படத்தில் நடித்து வரும் விஜய் தனது 69வது படத்தோடு நடிப்புக்கு முழுக்கு போட்டு அரசியலில் முழு கவனம் செலுத்த இருக்கிறார். இந்நிலையில் அவரது கடைசி படத்தை இயக்கப் போவது யார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. என்றாலும் எச்.வினோத் இயக்க, அனிருத் இசையமைப்பதாக கூறப்படுகிறது.
அதோடு இந்த படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்கிறார்களாம். இதற்கு முன்பு விஜய்யுடன் கத்தி, தெறி, மெர்சல் போன்ற படங்களில் நடித்த சமந்தாவும், பைரவா, சர்க்கார் போன்ற படங்களில் நடித்த கீர்த்தி சுரேசும் மீண்டும் அவருடன் இணைந்து நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.