மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
ஒரு காலத்தில் தனது துறையில் உச்சத்தில் இருந்து விட்டு கடைசி காலத்தில் கஷ்டத்தில் வாழ்ந்தவர்கள் சினிமாவில் அதிகம். தியாகராஜ பாகவதர் தங்க தட்டில் சாப்பிட்டு விட்டு, மாம்பலம் ரயில் நிலையத்தில் பசியால் படுத்துக் கிடந்தார். சாவித்ரி சொகுசு காரில் பயணம் செய்து விட்டு கடைசி காலத்தில் கை ரிக்ஷாவில் பயணித்தார். இப்படி நிறைய இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் இசை அமைப்பாளர் ஆர்.சுதர்சனம்.
சினிமா இசை வாய்ப்பு தேடி சென்னை வந்த சுதர்சனம் மிகுந்த போராட்டத்திற்கு பிறகு ஏவிஎம் நிறவனத்தில் மாதச் சம்பளத்திற்கு பணியாற்றும் இசை அமைப்பாளர் ஆனார். 'சகுந்தலை' படத்தில் தொடங்கிய இவர் பயணம், நாம் இருவர், வேதாள உலகம், வாழ்க்கை, ஓர் இரவு பராசக்தி, களத்தூர் கண்ணம்மா, தெய்வபிறவி, நானும் ஒரு பெண், பூம்புகார் என தொடர்ந்தது.
தமிழ்த் திரை உலகின் ஜாம்பவான்களாக வளர்ந்த பலருக்கு இவர்தான் அறிமுக இசை அமைப்பாளர். பராசக்தி சிவாஜியில் தொடங்கி, களத்தூர் கண்ணம்மா கமல்ஹாசன், வாழ்க்கை வைஜெயந்தி மாலா, கன்னட நடிகர் ராஜ்குமார் இப்படி பலரின் முதல் பட இசை அமைப்பாளர் இவர். டி எம் சவுந்தரராஜன் உள்ளிட்டோரை பாடகர்களாக அறிமுகப்படுத்தியவர்.
புதியவர்களின் வருகை, புதிய இசை கருவிகளின் வருகையால் வாய்ப்பு இழந்த சுதர்சனம் தனது கடைசி காலத்தில் மாணவர்களுக்கு இசை கற்றுக் கொடுத்து அந்த வருமானத்தில் வாழ்ந்து மறைந்தார். அவரது 110வது பிறந்த நாள் இன்று.