உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா | ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் | முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் | என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள் | ‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா | ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் | குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ் | நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் |
கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான பிரேமலு படம் மூலமாக கேரளா மட்டுமல்லாது தமிழகம் மற்றும் ஆந்திரா என தென்னிந்திய அளவில் மிகவும் புகழ் பெற்ற நடிகையாக மாறியவர் மமிதா பைஜூ. குறிப்பாக இளைஞர்களின் பேவரைட் நடிகையாக மாறிவிட்டார். தமிழில் ஜிவி பிரகாஷ் நடித்த ‛ரெபல்' படத்திலும் நடித்தார். இவர் இன்று கேரளாவில் இரண்டாம் கட்டமாக நடக்கும் பார்லிமென்ட் தேர்தலில் ஓட்டளிக்க முடியாத சூழலுக்கு ஆளாகியுள்ளார்.
ஆம்... இவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மகள் சினிமாவில் பிஸியாகி விட்டதால் அவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என சரி பார்ப்பதற்கு நேரம் கிடைக்காமல் போய்விட்டது என அவரது தந்தை டாக்டர் பைஜு கூறியுள்ளார்.
இதில் என்ன ஆச்சரியம் என்றால் நாடு முழுவதும் இருக்கும் மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு ஓட்டளிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் யூத் ஐகானாக கேரளாவில் தேர்வு செய்யப்பட்டவர் மமிதா பைஜூ. அப்படிப்பட்டவரின் பெயரே வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டுப் போய் இருப்பதை என்னவென்று சொல்வது?