ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மாஜி ஹீரோயினிகளில் சரண்யா போன்றோர் அம்மா வேடங்களில் நடித்துக்கொண்டிருக்க, ஊர்வசியோ பேச்சியக்கா மருமகன் என்ற படத்தில் மாமியார் வேடத்தில் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட இதுவும் இன்னொரு அம்மா வேடம் போன்றுதானாம். ஆனால் பக்கா கிராமத்து வேடமாம். தனது முதல் படமான முந்தானை முடிச்சு படத்திலேயே கிராமத்து பெண்ணாகத்தான் நடித்தார் ஊர்வசி. அந்த வகையில் இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தான் ரீ-என்ட்ரி ஆகியிருக்கும் படத்திலும் தனக்கு கிராமத்து வேடம் என்பதால் மிகுந்த உற்சாகத்தில் நடித்தாராம் ஊர்வசி.
மேலும், கிராமத்து வயதான பெண்களைப்போன்று புடவை, உடுத்திக்கொண்டு நடித்த ஊர்வசி, டப்பிங்கைகூட அங்குள்ள பெண்கள் பேசுவதுபோன்றே பேசினாராம். அதனால் எனது நடிப்பைப்போலவே இப்படத்தில் டப்பிங்கும் பக்காவாக இருக்கும் என்று சொல்லும் ஊர்வசி, இப்படத்திற்கு டப்பிங் பேசியபோது, எனது நடிப்பைப்பார்த்து நானே மனம் நெகிழ்ந்து போனேன். அதோடு, இனி இந்த மாதிரி மனதை தொடும் கதாபாத்திரங்களாக தேடிப்பிடித்து நடிக்கவும் முடிவு செய்திருக்கிறேன் என்கிறார் ஊர்வசி.