ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகமானவர் கெளதம். நடிகர் கார்த்திக்கின் மகனான இவர் அந்த படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்தார். ஆனால் படம் படுதோல்வியடைந்து அவரை ஏமாற்றி விட்டது. இருப்பினும், உடனடியாக சில கம்பெனிகளிடம் பேசி வந்த கார்த்திக், இப்போது மகனை இரண்டு படங்களில் ஒப்பந்தம செய்து விட்டார். அதில் ஒரு படத்தை 3 படத்தை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ் இயக்குகிறார். கல்பாத்தி அகோரம் படத்தை தயாரிக்கிறார்.
அப்படத்துக்கு வை ராஜா வை என்று பெயரிட்டுள்ள ஐஸ்வர்யா தனுசுக்கும் முதல் படம் சற்று சறுக்கி விட்டதால், இந்த முறை எப்படியேனும் வெற்றி பெற்று வெற்றிப்பட இயக்குனர் பட்டியிலில் இடம் பிடித்து விட வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறார். அதனால் முதல் படத்தில் செய்த சில தவறுகளை இந்த படத்தில் செய்யாமல் பக்காவாக படத்தை இயக்க வேண்டும் என்று கதை விவாதம் செய்து வருகிறார்.
மேலும், யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்கும் இப்படத்தில் ஜெய், பூர்ணிமா ஆகியோரும் நடிக்கிறார்கள். ஆனால் கெளதமுக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்பது இன்னும் முடிவாகவில்லையாம். தொடர்ந்து நாயகி தேர்வு நடத்தி வருகிறார் ஐஸ்வர்யா தனுஷ்.