ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா ஆரம்ப கால கட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, மாயாவி, பேரழகன் ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர். கடைசியாக இருவரும் இணைந்து சில்லுனு ஒரு காதல் படத்தில் இணைந்து நடித்து பின்னர் திருமணம் செய்து குடும்பம், குழந்தைகள் என தங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த சில வருடங்களாக ஜோதிகா கதாநாயகி மற்றும் முதன்மை கதாபாத்திரம் கொண்ட படங்களில் மட்டும் நடித்து வருகிறார். இப்போது பல வருடங்களுக்கு பிறகு சூர்யா, ஜோதிகா இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை ‛பெங்களூரு டேஸ்' இயக்குனர் அஞ்சலி மேனன் மற்றும் சில்லுக்கருப்பட்டி பட இயக்குனர் ஹலிதா ஹமிம் என இருவரில் ஒருவர் இயக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.