ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தனது வேண்டுகோளை ஏற்று பிறந்த நாள் கொண்டாட்டங்களை தவிர்க்கும் ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் நன்றி கூறியுள்ளார். நடிகர் அஜீத் பிறந்த நாள் மே 1ம்தேதி கொண்டாடப்படுகிறது. இதையட்டி ரசிகர்கள் கட்-அவுட், போஸ்டர்கள் என பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதுபற்றி அறிந்த அஜீத் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், தன் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதுடன், அதற்கு பதில் பெற்றோர்களை கவனித்து அவர்களுக்கு உதவியாக இருங்கள், என்றும் கூறியிருந்தார்.
அஜீத்தின் வேண்டுகோளை ஏற்று பல்வேறு ரசிகர்கள், போஸ்டர்கள் அச்சடிப்பதை நிறுத்தி விட்டனர். கட்அவுட்கள் தயார் செய்வதையும் கைவிட்டு விட்டார்கள். இதுகுறித்து அஜீத் கூறும்போது, எனக்கு கட்-அவுட் பேனர்கள் வைக்கவும் போஸ்டர்கள் அச்சடிக்கவும் ரசிகர்கள் பணத்தை செலவு செய்ய வேண்டாம். அந்த பணத்தை ஏழைகள் படிப்புக்கும், அவர்களுக்கு உணவளிக்கவும் செலவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். எனது வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ரசிகர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.