ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் கடந்த பல மாதங்களாக 'விடாமுயற்சி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா கசன்டரா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஏற்கனவே இதன் 70 சதவீத படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது. சமீபத்தில் சில பிரச்னைகளால் விடாமுயற்சி படப்பிடிப்பு தாமதம் ஆகி வந்தது. இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முடிந்த பின் வருகின்ற ஏப்ரல் 25ம் தேதி அஜர்பைஜான் பகுதியில் மீண்டும் தொடங்குகின்றனர். முழுமூச்சாக இந்த இறுதிகட்ட படப்பிடிப்பை மே மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர். இதில் அஜித், அர்ஜுன், த்ரிஷா சம்மந்தப்பட்ட காட்சிகளைக் பெரும்பாலும் படமாக்கவுள்ளனர்.