நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
'தமிழ் சினிமாவுக்கு என்னதான் ஆச்சு' என்ற சோகம் இந்த வாரம் முடியுமா, அடுத்த வாரம் முடியுமா எனப் பேசிப் பேசி போய்க் கொண்டே இருக்கிறது. இந்த 2024ம் ஆண்டின் நான்கு மாதங்கள் முடிய உள்ள நிலையில் லாபகரமான படங்கள் என ஒரு படத்தைக் கூட குறிப்பிட முடியாமல் உள்ளது.
கடந்த வாரம் ஜிவி பிரகாஷ்குமார் நடித்த 'டியர்', விஜய் ஆண்டனி நடித்த 'ரோமியோ' ஆகிய படங்கள் வெளிவந்தன. இந்தப் படங்களும் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறவில்லை. ஒரு கோடி வசூலையாவது கடந்ததா என்பதற்கான பதிலும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் கிடைக்கவில்லை.
அதே சமயம் கடந்த வாரம் வெளியான இரண்டு மலையாளப் படங்கள் 50 கோடி வசூலைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. ஜித்து மாதவன் இயக்கத்தில், பஹத் பாசில், சஜின் கோபு மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'ஆவேஷம்' படம் 60 கோடி வசூலைக் கடந்துள்ளது. பிரணவ் மோகன்லால், தியன் சீனிவாசன், நிவின் பாலி, பாசில் ஜோசப், வினீத் சீனிவாசன், கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வெளிவந்த 'வர்ஷங்களுக்கு ஷேஷம்' படம் 50 கோடி வசூலைக் கடந்துள்ளது.
மலையாள சினிமாவில் தொடர்ந்து சில படங்கள் 50 கோடி வசூலைக் கடந்து ஓடுவது மற்ற திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட படங்களே அதற்குக் காரணம் என்பது அனைவரது கருத்தாக உள்ளது.