ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

'தமிழ் சினிமாவுக்கு என்னதான் ஆச்சு' என்ற சோகம் இந்த வாரம் முடியுமா, அடுத்த வாரம் முடியுமா எனப் பேசிப் பேசி போய்க் கொண்டே இருக்கிறது. இந்த 2024ம் ஆண்டின் நான்கு மாதங்கள் முடிய உள்ள நிலையில் லாபகரமான படங்கள் என ஒரு படத்தைக் கூட குறிப்பிட முடியாமல் உள்ளது.
கடந்த வாரம் ஜிவி பிரகாஷ்குமார் நடித்த 'டியர்', விஜய் ஆண்டனி நடித்த 'ரோமியோ' ஆகிய படங்கள் வெளிவந்தன. இந்தப் படங்களும் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறவில்லை. ஒரு கோடி வசூலையாவது கடந்ததா என்பதற்கான பதிலும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் கிடைக்கவில்லை.
அதே சமயம் கடந்த வாரம் வெளியான இரண்டு மலையாளப் படங்கள் 50 கோடி வசூலைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. ஜித்து மாதவன் இயக்கத்தில், பஹத் பாசில், சஜின் கோபு மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'ஆவேஷம்' படம் 60 கோடி வசூலைக் கடந்துள்ளது. பிரணவ் மோகன்லால், தியன் சீனிவாசன், நிவின் பாலி, பாசில் ஜோசப், வினீத் சீனிவாசன், கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வெளிவந்த 'வர்ஷங்களுக்கு ஷேஷம்' படம் 50 கோடி வசூலைக் கடந்துள்ளது.
மலையாள சினிமாவில் தொடர்ந்து சில படங்கள் 50 கோடி வசூலைக் கடந்து ஓடுவது மற்ற திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட படங்களே அதற்குக் காரணம் என்பது அனைவரது கருத்தாக உள்ளது.