நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
குட்டிப் புலி, கொம்பன், மருது போன்ற கிராமத்து ஆக்ஷன் படங்களைக் ரசிகர்களுக்கு தந்தவர் இயக்குனர் முத்தையா. இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த 'காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம்' என படம் பெரிதளவில் தோல்வி அடைந்தது. இதனால் இவருக்கு அடுத்து எந்த முன்னனி நடிகர்களின் கால்ஷீட்டும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தனது இயக்கத்தில் தன் மகன் விஜய் முத்தையாவை கதாநாயகனாக அறிமுகபடுத்தி புதிய படம் ஒன்றைக் இயக்குவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக கூறப்பட்டது. இப்போது இந்த படத்திற்கு 'சுள்ளான் சேது' என தலைப்பு வைத்துள்ளதாக முதல் பார்வை போஸ்டர் உடன் இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அறிவித்துள்ளனர்.