நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 1,2,3 ஆகிய பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அரண்மனை படத்தின் 4ம் பாகத்தை இயக்கி நடித்துள்ளார் சுந்தர். சி. இதில் தமன்னா, ராஷி கண்ணா என இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். யோகி பாபு, வி.டி.வி.கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹிப்ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஏப்ரல் மாத இறுதியில் இப்படம் திரைக்கு வரும் என கூறப்பட்டு வந்ததைத் தொடர்ந்து இப்போது இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 26ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அறிவித்துள்ளனர். மேலும், ஏற்கனவே ஏப்.,26ம் தேதியில் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள 'ரத்னம்' படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.