நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'அமரன்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்திய ராணுவ வீரர் முகுந்தன் வாழ்க்கை வரலாற்று படமாக இப்படம் உருவாகியுள்ளது. இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ராஜ்கமல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில் இன்னும் சிவகார்த்திகேயன் சம்மந்தப்பட்ட 20 சதவீத படப்பிடிப்பு காட்சிகள் மீதமுள்ளதால் அடுத்த மாதத்தில் இதன் மீதமுள்ள காட்சிகளின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். மேலும், ஆகஸ்ட் மாதத்தில் இப்படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்ட படக்குழு இப்போது செப்டம்பர் மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 5ம் தேதி விஜய் நடித்துள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' திரைப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.