நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

'பேராண்மை' படத்தின் மூலம் கவனிக்கப்பட்டவர் சாய் தன்ஷிகா. அதன்பிறகு மாஞ்சா வேலு, அரவான், பரதேசி, கபாலி, விழித்திரு, காத்தாடி, இருட்டு உள்பட பல படங்களில் நடித்தார். கடைசியாக 'லாபம்' படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தார். அதன்பிறகு தமிழில் பட வாய்ப்புகள் அமையவில்லை. தெலுங்கு பக்கம் சென்றவர் அங்கு ஓரிரு படத்தில் நடித்தார்.
தற்போது 3 வருட இடைவெளிக்கு பிறகு 'தி புரூப்' என்ற படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். தன்ஷிகா தவிர ரித்விகா, அசோக், ருத்வீர்வரதன், இந்திரஜா, மைம் கோபி, மாரிமுத்து, ராஜசிம்மன், அஷ்மிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராதிகா மாஸ்டர் இயக்கியுள்ளார். கோல்டன் ஸ்டூடியோஸ் 23 என்ற பட நிறுவனம் சார்பில் கோமதி சத்யா தயாரித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் அடுத்த மாதம் 3ம் தேதி வெளியாகிறது.