ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த சில வருடங்களாக தனது எஸ்.கே.புரொடக்சன்ஸ் நிறுவனம் மூலம் படங்களைக் தயாரித்து வருகிறார். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, வாழ், கனா ஆகிய படங்களைக் தயாரித்துள்ளார். தற்போது நடிகர் சூரியை வைத்து 'கொட்டுக்காளி' என்கிற படத்தை எடுத்துள்ளார். இந்தப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விருது விழாக்களில் பங்கேற்று வருகிறது.
இந்நிலையில் இப்போது கமலக்கண்ணன் சுப்பிரமணியன் என்பவர் இயக்கத்தில் 'குரங்கு பெடல்' என்கிற வித்தியாசமான படத்தை தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். காளி வெங்கட் பிரதான வேடத்தில் நடித்துள்ளார். சைக்கிள் மற்றும் சிறுவனை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகி உள்ளது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தின் முதல்பார்வை வெளியாகி உள்ளது.