ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

தமிழில் பல படங்களில் குணச்சித்ர மற்றும் வில்லன் வேடங்களில் நடித்த அருள்மணி(65) மாரடைப்பால் சென்னையில் நேற்று இரவு காலமானார்.
தமிழில் பொன்னுமணி, தர்மசீலன், கருப்பு ரோஜா, அழகி, வேல் உள்ளிட்ட 90க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்தவர் அருள்மணி. நடிப்பு தவிர்த்து நடிப்பு மற்றும் இயக்குனர் பயிற்சிக்கான பள்ளியும் இவர் நடத்தி வந்தார்.
அதிமுக.,வின் நட்சத்திர பேச்சாளராகவும் உள்ளார். பார்லிமென்ட் தேர்தல் நடக்க உள்ள நிலையில் கடந்த 10 நாட்களாக பல்வேறு ஊர்களில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வந்தார். ஓய்வுக்காக சென்னை வந்த அவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
மறைந்த அருள்மணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டது. மதியத்திற்கு மேல் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் அஞ்சலிக்காக சென்னை, ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள அவரது அலுவலகத்தில் வைக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு மேல் கண்ணம்மா பேட்டை மயானத்தில் இறுதிச்சடங்கு நடக்கிறது. அருள்மணி மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.