திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
தமிழில் பல படங்களில் குணச்சித்ர மற்றும் வில்லன் வேடங்களில் நடித்த அருள்மணி(65) மாரடைப்பால் சென்னையில் நேற்று இரவு காலமானார்.
தமிழில் பொன்னுமணி, தர்மசீலன், கருப்பு ரோஜா, அழகி, வேல் உள்ளிட்ட 90க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்தவர் அருள்மணி. நடிப்பு தவிர்த்து நடிப்பு மற்றும் இயக்குனர் பயிற்சிக்கான பள்ளியும் இவர் நடத்தி வந்தார்.
அதிமுக.,வின் நட்சத்திர பேச்சாளராகவும் உள்ளார். பார்லிமென்ட் தேர்தல் நடக்க உள்ள நிலையில் கடந்த 10 நாட்களாக பல்வேறு ஊர்களில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வந்தார். ஓய்வுக்காக சென்னை வந்த அவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
மறைந்த அருள்மணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டது. மதியத்திற்கு மேல் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் அஞ்சலிக்காக சென்னை, ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள அவரது அலுவலகத்தில் வைக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு மேல் கண்ணம்மா பேட்டை மயானத்தில் இறுதிச்சடங்கு நடக்கிறது. அருள்மணி மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.