மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தமிழ் சினிமாவில் இரு துருவங்களாக இருக்கும் ஹீரோக்களான ரஜினி - கமல் இருவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். ஆனால் அதற்கு முந்தைய காலகட்டத்தில் இருந்த எம்ஜிஆர் - சிவாஜி இருவரும் கூண்டுக்கிளி என்கிற ஒரே ஒரு படத்திலும், இப்போதைய காலகட்டத்தில் விஜய் - அஜித் இருவரும் ராஜாவின் பார்வையிலே என்கிற ஒரே ஒரு படத்திலும் மட்டும் இணைந்து நடித்துள்ளனர். இந்த ராஜாவின் பார்வையிலே படத்தை இயக்கியவர் ஜானகி சவுந்தர். தயாரித்தவர் சவுந்தர பாண்டியன்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் உடனான அனுபவங்கள் குறித்து சவுந்தர பாண்டியன் பகிர்ந்து கொண்டபோது, கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு அதாவது ஜில்லா படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் தன்னையும் இன்னும் ஐந்து தயாரிப்பாளர்களையும் ஒன்றாக ஒரு ஹோட்டலுக்கு வரவழைத்த விஜய் ஆளுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் உதவித்தொகையாக கொடுத்தார் என்கிற தகவலை தற்போது தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்ல அந்த சமயத்திலேயே இதுபோன்று சில தயாரிப்பாளர்களை ஒன்றிணைத்து ஒரு படம் நடித்துக் கொடுக்குமாறு அதன்மூலம் நாங்கள் வாழ்க்கையில் செட்டில் ஆகி விடுவோம் என்று கோரிக்கை வைத்ததாகவும் அதற்கு விஜய் பதில் ஏதும் கூறாமல் சிரித்துக் கொண்டே நகர்ந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் விஜய்யின் கடைசி படத்தில் இது போன்று அவர் செய்தால் தங்களைப் போன்ற தயாரிப்பாளர்கள் பலருக்கும் அது பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.