ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வருடம் விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியானது. சூரி கதையின் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
சமீபத்தில் சர்வதேச திரைப்படம் விழா ஒன்றில் விடுதலை படத்தின் இரண்டு பாகங்களும் திரையிடப்பட்டன. முதல் பாகத்தில் போலீஸ் அதிகாரிகளாக நடித்திருந்த கவுதம் மேனன் மற்றும் சேத்தன் இருவருமே தங்களது நடிப்பால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றனர். குறிப்பாக ஒரு கொடூரமான போலீஸ் அதிகாரியாக சேத்தனின் நடிப்பு படம் பார்த்த ரசிகர்களுக்கு ஆத்திரத்தை வரவழைக்கும் அளவிற்கு வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் சமீபத்தில் திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சூரி பேசும்போது, “இந்த இரண்டாம் பாகத்தில் சேத்தனின் அட்ராசிட்டி இன்னும் அதிகமாக இருக்கும். தயவு செய்து படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் ஒரு வாரம் அவரை வெளியில் எங்கும் விடாமல் வீட்டிலேயே அடைத்து வைக்குமாறு அவரது வீட்டாரிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்று ஜாலியாக ஒரு கோரிக்கை விடுத்தார் சூரி. அந்த அளவிற்கு இந்த இரண்டாம் பாகத்திலும் சேத்தனின் கதாபாத்திரம் இன்னும் வலுவாக இடம் பெற்றுள்ளதாக சூரியின் பேச்சிலிருந்து தெரிகிறது.