விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகிறது | குழந்தையின் தாய் தற்கொலை : மனிதநேயம் இறந்து கொண்டிருப்பதாக நடிகை கல்யாணி ஆதங்கம் | 'ராமாயணா' - படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு ? | உங்கள் எதிர்பார்ப்பே என் எதிர்பார்ப்பு தனுஷூடன் அந்தோனி தாசன் | 5 மொழிகளில் ரீமேக் ஆகும் பார்கிங் திரைப்படம் | டிரான்சில்வேனியா திரைப்பட விழாவில் கொட்டுக்காளி | மம்முட்டியின் பிரம்மயுகத்தை தனியாக பார்க்க மாட்டேன் : ஷோபிதா துலிபாலா | பவன் கல்யாண் படத்தில் தபுவுக்கு பதிலாக ஸ்ரேயா ரெட்டி | டர்போ படத்தின் கதையே கதாநாயகி மீது தான் நகரும் : மம்முட்டி உறுதி | பஹத் பாசிலின் ஆவேசத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய மும்பை போலீஸ் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வரும் ‛கோட்' படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, பிரேம்ஜி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்நிலையில் நேற்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் பிரசாந்த், ‛கோட்' படம் குறித்து ஒரு அப்டேட் கொடுத்துள்ளார்.
அதில், கோட் படம் ரொம்ப நன்றாக வந்துள்ளது. இப்படம் ரசிகர்களுக்கு ஒரு மிகச்சிறந்த விருந்தாக இருக்கும். இந்த படத்தில் நான் நடித்திருக்கும் கதாபாத்திரம் குறித்து இப்போதே சொல்ல விரும்பவில்லை. ஆனால் வித்தியாசமான வேடம். மற்றபடி ரிலீசுக்கு பிறகு அதை தெரிந்து கொள்வீர்கள் என்று தெரிவித்துள்ளார் பிரசாந்த்.