மம்முட்டியின் பிரம்மயுகத்தை தனியாக பார்க்க மாட்டேன் : ஷோபிதா துலிபாலா | பவன் கல்யாண் படத்தில் தபுவுக்கு பதிலாக ஸ்ரேயா ரெட்டி | டர்போ படத்தின் கதையே கதாநாயகி மீது தான் நகரும் : மம்முட்டி உறுதி | பஹத் பாசிலின் ஆவேசத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய மும்பை போலீஸ் | போதை பார்ட்டியில் கலந்து கொண்டேனா? : நடிகர் ஸ்ரீகாந்த் விளக்கம் | சம்பளம் கேட்டால் மிரட்டுகிறார் : தயாரிப்பாளர் மீது நடிகை பாயல் புகார் | கல்கி 2898 ஏடி, இந்தியன் 2 - அடுத்தடுத்து இரண்டு பிரம்மாண்டங்கள் ரிலீஸ் | நட்பா, துரோகமா ? - அழுத்தமாக மிரட்டும் 'கருடன்' டிரைலர் | முதன் முறையாக தேர்தலில் ஓட்டளித்த அக்ஷய்குமார் | சின்னத்திரைக்கு வந்தார் வடிவேலு |
சிறுத்தை சிவா இயக்கத்தில் ‛கங்குவா' படத்தில் நடித்து முடித்திருக்கும் சூர்யா அடுத்தபடியாக சுதா இயக்கும் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில தினங்களுக்கு முன்பு சூர்யாவின் 44வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவதாக அறிவித்தார்கள். இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைய்ன்மென்ட் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
ஆக்சன் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்திற்காக தற்போது குதிரை சவாரி செய்யும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் சூர்யா. அதனால் இப்படம் சரித்திர காலகட்ட கதையில் உருவாகிறதா என்ற யூகங்களை ஏற்படுத்தி உள்ளது.