இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? |
ஜீ தமிழ் சேனலில் யாரடி நீ மோகினி தொடரில் நடித்து பிரபலமான நடிகை நக்ஷத்திரா, திருமணத்திற்கு பிறகு சீரியலில் நடிக்காமல் இருந்தார். கடந்த வருடம் நக்ஷத்திராவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், அவர் தற்போது மீண்டும் சீரியல் நடிக்க தொடங்கியுள்ளார். செவ்வந்தி தொடரில் திவ்யா ஸ்ரீதர், சிவான்யா ப்ரியங்கா உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இந்த தொடரில் வில்லி கதாபாத்திரம் திருந்திவிட்டது போல் கதையை நகர்த்தி வருகின்றனர். அதேசமயம் புதிய கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுக்கும் நக்ஷத்திரா ஹீரோயினுடன் போட்டியிடும் ரோலில் அறிமுகமாகிறார். இதற்கான ப்ரோமோ அண்மையில் வெளியான நிலையில் நீண்ட நாட்கள் கழித்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் நக்ஷத்திராவுக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.