'ராமாயணா' - படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு ? | உங்கள் எதிர்பார்ப்பே என் எதிர்பார்ப்பு தனுஷூடன் அந்தோனி தாசன் | 5 மொழிகளில் ரீமேக் ஆகும் பார்கிங் திரைப்படம் | டிரான்சில்வேனியா திரைப்பட விழாவில் கொட்டுக்காளி | மம்முட்டியின் பிரம்மயுகத்தை தனியாக பார்க்க மாட்டேன் : ஷோபிதா துலிபாலா | பவன் கல்யாண் படத்தில் தபுவுக்கு பதிலாக ஸ்ரேயா ரெட்டி | டர்போ படத்தின் கதையே கதாநாயகி மீது தான் நகரும் : மம்முட்டி உறுதி | பஹத் பாசிலின் ஆவேசத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய மும்பை போலீஸ் | போதை பார்ட்டியில் கலந்து கொண்டேனா? : நடிகர் ஸ்ரீகாந்த் விளக்கம் | சம்பளம் கேட்டால் மிரட்டுகிறார் : தயாரிப்பாளர் மீது நடிகை பாயல் புகார் |
மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலமாக ரசிகர்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகர் நிவின்பாலி. தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து முன்னணி இடத்தை நோக்கி நகர்ந்து வந்தவர், சமீப காலமாக படங்களை சரியாக தேர்வு செய்யாமல் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறார். தற்போது தமிழில் ராம் இயக்கியுள்ள ஏழு கடல் ஏழுமலை மற்றும் மலையாளத்தில் வினீத் சீனிவாசன் இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள வருஷங்களுக்கு சேஷம் ஆகிய படங்கள் நிவின்பாலிக்கு நம்பிக்கை தரும் படங்களாக உருவாகி உள்ளன.
இதில் வருஷங்களுக்கு சேஷம் படத்தின் இயக்குனர் வினீத் சீனிவாசன் தான் முதன்முதலாக தான் இயக்கிய மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் என்கிற படத்தின் மூலம் நிவின்பாலியை அறிமுகப்படுத்தியவர். தொடர்ந்து அவரை வைத்து சில படங்களை இயக்கியும் அவருடன் சில படங்களில் இணைந்து நடித்தும் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தங்களது நட்பை அடைகாத்து வருகின்றனர்.
இந்த நிலையில் வரும் ஏப்ரல் 11ம் தேதி வருஷங்களுக்கு சேஷம் படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் மோகன்லாலின் மகன் பிரணவ் கதாநாயகனாக நடித்திருந்தாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிவின்பாலிக்கு இந்த படம் ஒரு வெற்றிகரமான கம் பேக் ஆக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் வினீத் சீனிவாசன்.