நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமாகி அதன்பிறகு இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் வலம் வந்து கொண்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். தற்போது அவர் நடித்து இசையமைத்துள்ள கள்வன் என்ற படம் திரைக்கு வந்துள்ளது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இவானா நடிக்க, பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், தனுஷ் உடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரிடத்தில் 6 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்ததாக தெரிவித்திருக்கிறார். நாங்கள் இருவரும் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்ததால் இது போன்ற சண்டை ஏற்பட்டது. என்றாலும் ஒரு கட்டத்தில் மீண்டும் நாங்கள் நல்ல நண்பர்களாகி விட்டோம். தற்போது ஒருவரது மனநிலையை ஒருவர் புரிந்து கொண்டதால் இனிமேல் நாங்கள் சண்டை போடுவதற்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவித்து இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.