ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் | மொழிக்காக ‛தக் லைப்' படத்திற்கு தடை விதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம் | வெறுப்பை பரப்பி சினிமாவை அழிக்கும் ஒரு குழு: கார்த்திக் சுப்பராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு | விமான விபத்து ரொம்ப வருத்தமா இருக்கு: ரஜினி கவலை | சிம்பு, வெற்றிமாறன் கூட்டணியில் இணையும் பிரபலங்கள் | ஜுன் 20ல் மும்முனைப் போட்டி | அதிக நேரம் ஓடும் படங்களில் 5வது இடம் பிடித்த 'குபேரா' | விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி |
தெலுங்கு திரையுலகில் ரசிகர்களின் மிகவும் மனம் கவர்ந்த ஜோடியாக வலம் வருபவர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் படத்தை தொடர்ந்து டியர் காம்ரேட் என்கிற படத்தில் இவர்கள் இணைந்து நடித்தாலும் அதன் பிறகு இவர்களை சுற்றி சுழன்றடித்து வரும் கிசுகிசுக்களால் மீண்டும் இருவரும் இணைந்து படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகின்றனர். ஆனாலும் இருவர் சம்பந்தப்பட்ட குடும்ப விழாக்களிலும் சினிமா நிகழ்வுகளிலும் பரஸ்பரம் பங்கேற்று வருகின்றனர்.
இந்த நிலையில் வரும் ஏப்ரல் 5ம் தேதி விஜய் தேவரகொண்டா நடித்துள்ள பேமிலி ஸ்டார் படம் வெளியாகிறது. தில் ராஜு தயாரித்துள்ள இந்த படத்தை விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா என்கிற ராசியான ஜோடியை உருவாக்கிய இயக்குனர் பரசுராம் தான் இயக்கியுள்ளார். இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் இந்த படம் வெளியாகும் ஏப்ரல் 5ம் தேதி தான் ராஷ்மிகாவின் பிறந்த நாளும் கூட.
அந்த வகையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஏதேச்சையாக அமைந்ததா அல்லது திட்டமிடப்பட்ட ஒன்றா என்கிற கேள்வி சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் தேவரகொண்டாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் தேவரகொண்டா, “விடுமுறை நாட்கள் துவங்குவதை முன்னிட்டு தான் இந்த தேதியை முடிவு செய்தோம். இது ராஷ்மிகாவின் பிறந்தநாள் என்பதால் எங்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்றும் நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.