ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு அவரது தாய் மாமா கார்த்திக்குடன் சென்ற வாரம் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது. ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவின் தம்பி தான் இந்த கார்த்திக் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கையில் அவரை பற்றிய சில தகவல்களை அவரே கூறியுள்ளார்.
கார்த்திக் சிறுவயதாக இருக்கும்போதே அவரது தந்தை இறந்துவிட்டார். அதன்பின் தாயாருடன் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்த அவர் தொடர்வோம் என்ற தொண்டு நிறுவனத்தின் கீழ் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அவர் அண்மையில் அளித்த பேட்டியில், 'எங்கள் நிறுவனத்தில் ரோபோ சங்கர் மாமாவும், ப்ரியங்கா அக்காவும் உறுப்பினர்கள். அப்படிதான் எனக்கு அவர்கள் அறிமுகம் கிடைத்தது. நான் குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பது போல் பிரியங்கா அக்கா என்னை தம்பியாக தத்தெடுத்துக் கொண்டார். என்னுடைய வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பிரியங்கா அக்காவின் பங்களிப்பும் நிறைய உள்ளது' என்று பெருமையாக உணர்ச்சி பொங்க பேசியுள்ளார்.