மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
இந்திய சினிமாவின் முக்கியமான படமாக கொண்டாடப்பட்டு வருகிறது 'ஆடுஜீவிதம்'. பிளஸ்சி இயக்கத்தில் பிருத்விராஜ் நடித்துள்ள இந்த படம் அரேபிய பாலைவனத்தில் அடிமையாக்கப்பட்ட ஒரு மலையாள இளைஞன் பற்றிய கதை அம்சத்தை கொண்டது. 16 வருட திட்டமிடல், 6 வருட உழைப்பு. கொரோனா உள்ளிட்ட பிரச்சினைகள் இவற்றை கடந்து சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படியான படம் வெளியான சில நாட்களிலேயே நல்ல தொழில்நுட்ப தரத்துடன் இணையத்தில் கசிந்துள்ளது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் பிளஸ்சி எர்ணாகுளம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
“இந்த படம் பாலைவனத்தில் வியர்வையும், ரத்தமும் சிந்தி உருவாக்கப்பட்டது. இது இணையத்தில் கசிந்ததால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும். படம் வெளியான சில மணி நேரங்களிலேயே கனடாவில் இருந்து இணையத்தில் கசிந்துள்ளது” என்று தனது புகாரில் உள்ளார். அதோடு அதற்கான ஆதாரத்தையும் போலீசிடம் கொடுத்துள்ளார்.