திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
இந்திய சினிமாவின் முக்கியமான படமாக கொண்டாடப்பட்டு வருகிறது 'ஆடுஜீவிதம்'. பிளஸ்சி இயக்கத்தில் பிருத்விராஜ் நடித்துள்ள இந்த படம் அரேபிய பாலைவனத்தில் அடிமையாக்கப்பட்ட ஒரு மலையாள இளைஞன் பற்றிய கதை அம்சத்தை கொண்டது. 16 வருட திட்டமிடல், 6 வருட உழைப்பு. கொரோனா உள்ளிட்ட பிரச்சினைகள் இவற்றை கடந்து சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படியான படம் வெளியான சில நாட்களிலேயே நல்ல தொழில்நுட்ப தரத்துடன் இணையத்தில் கசிந்துள்ளது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் பிளஸ்சி எர்ணாகுளம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
“இந்த படம் பாலைவனத்தில் வியர்வையும், ரத்தமும் சிந்தி உருவாக்கப்பட்டது. இது இணையத்தில் கசிந்ததால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும். படம் வெளியான சில மணி நேரங்களிலேயே கனடாவில் இருந்து இணையத்தில் கசிந்துள்ளது” என்று தனது புகாரில் உள்ளார். அதோடு அதற்கான ஆதாரத்தையும் போலீசிடம் கொடுத்துள்ளார்.