விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகிறது | குழந்தையின் தாய் தற்கொலை : மனிதநேயம் இறந்து கொண்டிருப்பதாக நடிகை கல்யாணி ஆதங்கம் | 'ராமாயணா' - படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு ? | உங்கள் எதிர்பார்ப்பே என் எதிர்பார்ப்பு தனுஷூடன் அந்தோனி தாசன் | 5 மொழிகளில் ரீமேக் ஆகும் பார்கிங் திரைப்படம் | டிரான்சில்வேனியா திரைப்பட விழாவில் கொட்டுக்காளி | மம்முட்டியின் பிரம்மயுகத்தை தனியாக பார்க்க மாட்டேன் : ஷோபிதா துலிபாலா | பவன் கல்யாண் படத்தில் தபுவுக்கு பதிலாக ஸ்ரேயா ரெட்டி | டர்போ படத்தின் கதையே கதாநாயகி மீது தான் நகரும் : மம்முட்டி உறுதி | பஹத் பாசிலின் ஆவேசத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய மும்பை போலீஸ் |
இந்திய சினிமாவின் முக்கியமான படமாக கொண்டாடப்பட்டு வருகிறது 'ஆடுஜீவிதம்'. பிளஸ்சி இயக்கத்தில் பிருத்விராஜ் நடித்துள்ள இந்த படம் அரேபிய பாலைவனத்தில் அடிமையாக்கப்பட்ட ஒரு மலையாள இளைஞன் பற்றிய கதை அம்சத்தை கொண்டது. 16 வருட திட்டமிடல், 6 வருட உழைப்பு. கொரோனா உள்ளிட்ட பிரச்சினைகள் இவற்றை கடந்து சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படியான படம் வெளியான சில நாட்களிலேயே நல்ல தொழில்நுட்ப தரத்துடன் இணையத்தில் கசிந்துள்ளது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் பிளஸ்சி எர்ணாகுளம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
“இந்த படம் பாலைவனத்தில் வியர்வையும், ரத்தமும் சிந்தி உருவாக்கப்பட்டது. இது இணையத்தில் கசிந்ததால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும். படம் வெளியான சில மணி நேரங்களிலேயே கனடாவில் இருந்து இணையத்தில் கசிந்துள்ளது” என்று தனது புகாரில் உள்ளார். அதோடு அதற்கான ஆதாரத்தையும் போலீசிடம் கொடுத்துள்ளார்.