திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் போஸ் வெங்கட். பல படங்களில் வில்லன் மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்த அவர் 'கன்னி மாடம்' என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். ஜாதி ஆணவக்கொலை பற்றி பேசிய இந்த படம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது. இதில் இயக்குனர் யார் கண்ணனின் மகள் சாயாதேவி நாயகியாக அறிமுகமாகியிருந்தார்.
போஸ் வெங்கட் தற்போது 'மா.பொ.சி' படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தை எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் சார்பில் சிராஜ் தயாரிக்க, விமல் கதையின் நாயகனாக நடிக்க, சாயாதேவி நாயகியாக நடித்துள்ளார். பருத்தி வீரன் சரவணன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்த படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தை போஸ் வெங்கட், இயக்குனர் வெற்றி மாறனுக்கு போட்டுக் காட்டினார். அவருக்கு படம் பிடித்து விடவே தனது கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி சார்பில் படத்தை வாங்கி வெளியிடுகிறார். விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.
“மா.பொ.சி என்பது சிலம்பு செல்வர் மா.பொ.சியின் கதை அல்ல. அவருக்கும் இந்த படத்தின் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சென்னை இளைஞன் ஒருவன் வாழ்க்கையை வித்தியாசமாக சொல்லும் படம். படத்தின் பணிகள் முடிந்து விட்டது. வெற்றிமாறன் படத்தை வெளியிட ஒப்புக் கொண்டதே படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. இது தியேட்டர்களிலும் தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது” என்கிறார் போஸ் வெங்கட்.