துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் நவாசுதீன் சித்திக். தமிழில் 'பேட்ட' படத்திலும் நடித்திருக்கிறார். இவரது மனைவி ஆலியா சித்திக். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆலியா கணவரை பிரிந்து தனது குழந்தைகளுடன் துபாயில் வசித்து வருகிறார்.
கடந்த 2020ம் ஆண்டு ஆலியா தனது கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து குழந்தைகளை தனது கட்டுப்பாட்டில் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி நவாசுதின் சித்திக் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் இருவரையும் சமரசமாகச் செல்லும்படி கேட்டுக்கொண்டது. இந்த நிலையில் தற்போது குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நவாசுதீனுடன் சேர்ந்து வாழ ஆலியா முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து ஆலியா கூறும்போது "எங்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்னைகளுக்கு மூன்றாம் நபர்கள்தான் காரணம் என்று நினைக்கிறேன். தவறான புரிதல்கள் எங்கள் வாழ்வில் தற்போது இல்லை. எங்கள் குழந்தைகளுக்காக நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளோம். இருவருக்கும் இடையில் கெட்ட நினைவுகள் இருந்தாலும் சில அழகிய அன்பான தருணங்களும் இருக்கின்றன. நாங்கள் அந்த இனிமையான தருணங்களையே எடுத்துக்கொண்டு திருமண வாழ்க்கையைத் தொடர முடிவு செய்திருக்கிறோம்" என்கிறார்.
சமரசத்திற்கு பிறகு நவாசுதீனும், ஆலியாவும் தங்களது 14வது திருமண நாளை துபாயில் கொண்டாடி உள்ளனர். அந்த படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.