துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த மணிகண்டன், 'ஜெய் பீம்' படத்தின் மூலம் சினிமாவில் அடையாளம் காணப்பட்டார். அதன்பிறகு அவர் நடித்த 'குட் நைட்' படம் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை உருவாக்கியது. கடைசியாக வெளிவந்த 'லவ்வர்' படம் அவரது வணிக பரப்பை விரிவுபடுத்தியது.
இந்த நிலையில் தனது அடுத்த படத்தில் சத்தமின்றி நடித்து முடித்திருக்கிறார் மணிகண்டன். சினிமாக்காரன் என்ற நிறுவனம் சார்பில் வினோத்குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. ராஜேஷ்வர் காளிசாமி இயக்கி உள்ளார். சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன், கனகம்மா, ஜென்சன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். சுஜித் சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார், வைசாக் பாபுராஜ் இசை அமைத்துள்ளார்.
படம் குறித்து இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி கூறும்போது “ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்து இளைஞன் தன்மானத்திற்காகவும், குடும்பத்தின் நலனுக்காகவும் எதிர்கொள்ளும் சவால்களே இத்திரைப்படத்தின் மையக்கரு. பேமிலி காமெடி டிராமாவாக உருவாகி இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் ஆரம்பித்த படத்தை இப்போது முடித்திருக்கிறோம். இரண்டு ஷெட்யூலாக 65 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். கோயம்புத்தூரில் மார்க்கெட், காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் என லைவ்வாக நிறைய இடங்களில் படமாக்கினோம்” என்றார்.