துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்து இப்போது குணச்சித்ர நடிகையாக அசத்தி வருபவர் சரண்யா பொன்வண்ணன். இவரது கணவரான இயக்குனரும், நடிகருமான பொன்வண்ணனும் சினிமாவில் நடித்து வருகிறார். சென்னை, விருகம்பாக்கம் பகுதியில் இவர்கள் வசித்து வருகின்றனர்.
பார்க்கிங் தொடர்பாக சரண்யாவுக்கும், பக்கத்து வீட்டுக்காரர் ஸ்ரீதேவி என்பவருக்கும் சிறுசிறு தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஸ்ரீதேவி தனது வாயில் கேட்டை திறந்தபோது அந்த கேட் அருகில் நிறுத்தப்பட்டிருந்த சரண்யாவின் கார் மீது உரசியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சரண்யா - ஸ்ரீதேவி இடைய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சரண்யா தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுவதாகவும் கூறி சரண்யா மீது விருகம்பாக்கம் போலீஸில் ஸ்ரீதேவி புகார் அளித்துள்ளார். அதோடு இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளையும் அவர் சமர்ப்பித்துள்ளார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.