விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' |
இந்திய சினிமாவில் முதல் புகழ் பெற்ற நடிகை என்றால் அது தேவிகா ராணிதான். 1908ம் ஆண்டு ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் பிறந்த இவர் பெங்காலி குடும்பத்தை சேர்ந்தவர். தந்தை ராணுவ அதிகாரி. பெரிய கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்தவர். அவரது முன்னோர்கள் ஆங்கில அரசில் பெரிய பதவியில் இருந்தவர்கள். கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் உறவினர்.
லண்டனில் படித்த தேவிகா ராணி. பள்ளி படிப்பு முடிந்ததும் நடிப்பு, நடனம் கற்றார். இவரது கணவர் சினிமா தயாரிப்பாளர் என்பதால் அவருடன் இவரும் சினிமா தயாரிப்பில் ஈடுபட்டார். சில குறும்படங்களை இயக்கினார். ஆங்கிலம், ஹிந்தியில் 'கர்மா' என்ற முதல் பேசும்படத்தை தயாரித்தார். இந்த படத்தில் அவர் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தில் லிப்லாக் முத்தக்காட்சி இடம்பெற்று அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய சினிமாவில் முதல் லிப் லாக் முத்தக்காட்சி இது.
அதன்பிறகு ஏராளமான படங்களில் நடித்த தேவிகா ராணி சொந்தமாக ஸ்டூடியோ கட்டினார், தியேட்டர் கட்டினார், சினிமாவின் அத்தனை பணியிலும் ஈடுபட்ட தேவிகா ராணி இந்திய சினிமாவின் முதல் பெண் ஆளுமை என்று போற்றப்படுகிறார். இந்திய சினிமாவின் உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருதை முதலில் பெற்றவரும் இவர்தான். இன்று தேவிகா ராணியின் 116வது பிறந்த நாள்.