சூர்யா படத்துக்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் | இப்போதும் நான் தான் வீட்டிற்கு பால் வாங்கி வருகிறேன் : பஹத் பாசில் | 'கருடன்' படத்திற்கு வியாபார வட்டத்தில் வரவேற்பு | அக்கா வேடத்தில் நடிக்க நயன்தாராவுக்கு இவ்வளவு சம்பளமா? | 'ஸ்டார்' படம் முதல் நாள் வசூல் எவ்வளவு ? | 'பாகுபலி 3' போன்று 'கேஜிஎப் 3' பற்றியும் வெளியான புதிய தகவல் | தெலுங்கு படங்களில் நடிப்பதில் உள்ள சங்கடம் இதுதான் : சம்யுக்தா | என்டிஆருக்கு பாரதரத்னா : சிரஞ்சீவி விருப்பம் | 'தி கோட்' - அமெரிக்கா புறப்பட்ட விஜய் | மே 31ல் திரைக்கு வரும் கருடன் திரைப்படம் |
கடந்த 2014ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கிய அரண்மனை படம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. அதன்பிறகு அப்படத்தின் இரண்டாம், மூன்றாம் பாகங்களை இயக்கினார் சுந்தர் சி. தற்போது அவர் அரண்மனை நான்காம் பாகத்தையும் இயக்கி முடித்திருக்கிறார். சுந்தர் சி முதன்மை வேடத்தில் நடிக்க தமன்னா, ராஷி கண்ணா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு, தொழில்நுட்ப பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் ரிலீஸ் தாமதமாகி வந்தது. இந்த நிலையில் தற்போது அரண்மனை 4 படத்தை தயாரித்து உள்ள நடிகை குஷ்பு, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் 2024 ஏப்ரலில் அரண்மனை 4 திரைக்கு வரும் என்று ஒரு போஸ்டருடன் அறிவித்திருக்கிறார்.
ஹரி இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் ரத்னம் படம் ஏப்ரல் 26ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்பேஅரண்மனை 4 திரைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.