முரண்களை கடந்த முழுமையான அன்பு இது | கைவிடப்படும் விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப் தொடர்! | மலேசியாவில் ‛தி கோட்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்த திட்டம்! | யஷ் படத்தில் இணைந்த அஜித் பட நடிகை! | சூர்யா 44வது படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகர்! | நண்பரையே திருமணம் முடித்த ஸ்வேதா கெல்கே! வைரலாகும் புகைப்படங்கள் | விவசாயி, சூர்யவம்சம், கேப்டன் மில்லர் - ஞாயிறு திரைப்படங்கள் | சூர்யா படத்துக்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் | இப்போதும் நான் தான் வீட்டிற்கு பால் வாங்கி வருகிறேன் : பஹத் பாசில் | 'கருடன்' படத்திற்கு வியாபார வட்டத்தில் வரவேற்பு |
இந்திய சுதந்திர போராட்டம் என்றாலே நம் நினைவுக்கு வருவது உப்பு சத்யாகிரகம், வெள்ளையனே வெளியேறு போராட்டம், வீரபாண்டிய கட்டபொம்மன், ஜான்சி ராணி, காந்தி இப்படித்தான் நினைவுக்கு வரும். ஆனால் ஆங்கிலேயர்களுக்கு எதிரான பல போராட்ட வடிவங்களை கொண்டிருந்தது சுந்திர யுத்தம்.
அவற்றில் ஒன்றுதான் ஆங்கிலேயர்கள் கண்ணில் விரல் விட்டு ஆட்டி ரகசிய வானொலி நடத்தி தலைவர்களின் வீரமிக்க உரைகளை மக்களிடம் கொண்டு சேர்த்த வீரப் பெண்மணி உஷா மேத்தாவின் கதை. அதிகம் அறியப்படாத உஷா மேத்தாவின் வரலாறு தற்போது ஹிந்தியில் திரைப்படமாக தயாராகி நேரடியாக ஓடிடியில் வெளியாகி உள்ளது. தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் பார்க்கலாம்.
'ஏ வதன் மேரே வதன்' என்ற பெயரில் உருவாகி உள்ள இந்த படத்தில் உஷா மேத்தாவாக சாரா அலிகான் நடித்துள்ளார். இம்ரான் ஹாஸ்மி, ஆனந்த் திவாரி, அபய் வர்மா எனப் பலர் நடித்துள்ளனர். கரண் ஜோஹர் தயாரித்த இந்த திரைப்படத்தை கண்ணன் ஐயர் இயக்கி இருக்கிறார். ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.