மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
இந்திய சுதந்திர போராட்டம் என்றாலே நம் நினைவுக்கு வருவது உப்பு சத்யாகிரகம், வெள்ளையனே வெளியேறு போராட்டம், வீரபாண்டிய கட்டபொம்மன், ஜான்சி ராணி, காந்தி இப்படித்தான் நினைவுக்கு வரும். ஆனால் ஆங்கிலேயர்களுக்கு எதிரான பல போராட்ட வடிவங்களை கொண்டிருந்தது சுந்திர யுத்தம்.
அவற்றில் ஒன்றுதான் ஆங்கிலேயர்கள் கண்ணில் விரல் விட்டு ஆட்டி ரகசிய வானொலி நடத்தி தலைவர்களின் வீரமிக்க உரைகளை மக்களிடம் கொண்டு சேர்த்த வீரப் பெண்மணி உஷா மேத்தாவின் கதை. அதிகம் அறியப்படாத உஷா மேத்தாவின் வரலாறு தற்போது ஹிந்தியில் திரைப்படமாக தயாராகி நேரடியாக ஓடிடியில் வெளியாகி உள்ளது. தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் பார்க்கலாம்.
'ஏ வதன் மேரே வதன்' என்ற பெயரில் உருவாகி உள்ள இந்த படத்தில் உஷா மேத்தாவாக சாரா அலிகான் நடித்துள்ளார். இம்ரான் ஹாஸ்மி, ஆனந்த் திவாரி, அபய் வர்மா எனப் பலர் நடித்துள்ளனர். கரண் ஜோஹர் தயாரித்த இந்த திரைப்படத்தை கண்ணன் ஐயர் இயக்கி இருக்கிறார். ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.