கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! |
மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். தற்போது அன்பு இயக்கத்தில் ‛படை தலைவன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். யானையை பின்புலமாக வைத்து இந்தப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு வளர்ந்து வருகிறது. விஜயகாந்த் இறந்த சமயத்தில் சண்முக பாண்டியன் உடன் ஒரு படத்தில் நடிக்க தயார் என அறிவித்திருந்தார் ராகவா லாரன்ஸ். இப்போது அதை நிறைவேற்றி உள்ளார்.
படை தலைவன் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த காட்சியில் ராகவா நடித்துள்ளார். இதுபற்றி அன்பு கூறுகையில், ‛‛படை தலைவன் படத்தில் முக்கியமான இடத்தில் 5 நிமிட காட்சி இருந்தது. இதில் நடிக்க ராகவா லாரன்ஸிடம் கேட்டோம். அவர் எந்த மறுப்பும் சொல்லாமல் நடித்து தந்தார். இதற்காக அவர் சம்பளமும் வேண்டாம் என கூறிவிட்டார். 4 ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்பங்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்தால் போதும் என்றார். லாரன்ஸால் படை தலைவனுக்கு மேலும் வலு சேர்த்தது போல இருந்தது'' என தெரிவித்துள்ளார்.