ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

தமிழில் சைத்தான், கன்னி ராசி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மலையாள நடிகை அருந்ததி நாயர். திருவனந்தபுரத்தில் வசித்து வரும் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சகோதரர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கினார். தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் உயிருக்கு போராடி வருகிறார். இவருக்கு அடுத்ததாக மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அறுவை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ செலவுகளுக்காக அருந்ததி நாயரின் குடும்பம் மிகப்பெரிய அளவில் சிரமப்படுவதாகவும் இதற்காக அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பண உதவி தேவைப்படுவதாகவும் மலையாள திரை உலகை சேர்ந்த ரம்யா ஜோசப் என்கிற நடிகை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இதுவரை திரையுலகத்தில் இருந்து யாரும் அருந்ததியின் மருத்துவ செலவிற்காக நிதி உதவி செய்யவில்லை என்பதுடன் ஒருவர் கூட அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது என்று கடந்த ஐந்து நாட்களாக விசாரிக்க கூட இல்லை என்று தனது வருத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் ரம்யா ஜோசப்.