சூர்யா படத்துக்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் | இப்போதும் நான் தான் வீட்டிற்கு பால் வாங்கி வருகிறேன் : பஹத் பாசில் | 'கருடன்' படத்திற்கு வியாபார வட்டத்தில் வரவேற்பு | அக்கா வேடத்தில் நடிக்க நயன்தாராவுக்கு இவ்வளவு சம்பளமா? | 'ஸ்டார்' படம் முதல் நாள் வசூல் எவ்வளவு ? | 'பாகுபலி 3' போன்று 'கேஜிஎப் 3' பற்றியும் வெளியான புதிய தகவல் | தெலுங்கு படங்களில் நடிப்பதில் உள்ள சங்கடம் இதுதான் : சம்யுக்தா | என்டிஆருக்கு பாரதரத்னா : சிரஞ்சீவி விருப்பம் | 'தி கோட்' - அமெரிக்கா புறப்பட்ட விஜய் | மே 31ல் திரைக்கு வரும் கருடன் திரைப்படம் |
இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை கதையில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். ‛இளையராஜா' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. கமல் முன்னின்று படத்தின் அறிமுக போஸ்டரை வெளியிட்டார். அருண் மாதேஸ்வரன் இயக்க, இளையராஜாவே இசையமைக்கிறார்.
படத்தின் அறிமுக விழாவில் பேசிய தனுஷ், ‛‛நம்மில் பல பேருக்கு இரவில் தூக்கம் வரவில்லை என்றால் இளையராஜாவின் இசை, பாட்டை கேட்டு தூங்குவோம். ஆனால் நான் பல இரவுகள் இளையராஜாவாக நடித்தால் எப்படி இருக்கும் என மனதில் நடித்து பார்த்து தூக்கம் இல்லாமல் இருந்துள்ளேன்.
நான் இரண்டு பேரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க ஆசைப்பட்டேன். ஒருவர் இளையராஜா, இன்னொருவர் ரஜினிகாந்த். ஒன்று நடந்துள்ளது. இது எனக்கு மிகப்பெரிய கர்வத்தை தருகிறது. நான் இளையராஜாவின் ரசிகன், பக்தன். அவரது இசை தான் எனக்கு துணை. இது எல்லோருக்கும் பொருந்தும். அதைத்தாண்டி அவரின் இசை எனக்கு நடிப்பு ஆசானும் கூட. நடிப்புன்னா என்னவென்று தெரியாத காலக்கட்டத்திலும் சரி, இப்பவும் சரி நான் நடிப்பதற்கு முன் இளையராஜாவின் இசை அந்தக்காட்சியில் எப்படி நடிக்கணும் என எனக்கு சொல்லிக் கொடுக்கும். அதை உள்வாங்கி நடிப்பேன்.
இந்த வேடத்தில் நடிப்பது பெரிய சவால் என எல்லோரும் சொல்றாங்க. ஆனால் எனக்கு அப்படி தெரியவில்லை. இப்பவும் அவரின் இசை எப்படி நடிக்கணும் என்று எனக்கு சொல்லும். இந்த நிகழ்ச்சிக்கு வரும்போது கூட இளையராஜா சார் நீங்க முன்னாடி போங்க, உங்க கைய பிடிச்சு நான் பின்னாடி வரேன் என்றேன். அதற்கு அவர் நான் என்ன உனக்கு கைடா என கேட்டார். நீங்க எனக்கு கைடு தான். நான் உங்களை பின்பற்றி தான் வந்து கொண்டு இருக்கிறேன்'' என்றார்.