Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என் வழியில் யாரும் குறுக்கிட அனுமதிக்க மாட்டேன் : நடிகை அஞ்சலி அதிரடி முடிவு

15 ஏப், 2013 - 19:59 IST
எழுத்தின் அளவு:

 ""இனி, என் வழியில் யாரும் குறுக்கிட முடியாது. எந்த முடிவாக இருந்தாலும், நானே எடுப்பேன், என, நடிகை அஞ்சலி கூறினார்.ஐதராபாத்திற்கு தெலுங்கு படப்பிடிப்புக்கு சென்ற அஞ்சலி, ஓட்டலிலிருந்து தலைமறைவானார். பின், அளித்த பேட்டியால், சித்தி பாரதிதேவியுடனும், திரைப்பட இயக்குனர் களஞ்சியத்துடனும் மோதல் ஏற்பட்டது. சித்தி பாரதிதேவி, இயக்குனர் களஞ்சியம் பிரச்னை தவிர, மற்ற பிரச்னைகளை அஞ்சலி சுமுகமாக முடித்துள்ளார்; குடும்பத்தாரை தனக்கு சாதமாக பேச வைத்து விட்டார்.சித்தி பாரதி தேவி, சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்துள்ள ஆட்கொணர்வு மனு மட்டுமே, தற்போது அஞ்சலிக்கு பிரச்னையாக உள்ளது. இந்த மனுவை வாபஸ் வாங்க, சித்தி பாரதிதேவியுடன் பேசுவதற்கு, முக்கிய சினிமா புள்ளிகள் மூலம், நடிகை அஞ்சலி , முயற்சி மேற்கொண்டுள்ளார்.

இது குறித்து, அஞ்சலி கூறியதாவது:தனிப்பட்ட வாழ்க்கையில், நிறைய பிரச்னைகளை சந்தித்து விட்டேன். இனி, என் வாழ்க்கையில் யாரும் பிரச்னை ஏற்படுத்த முடியாது. எல்லா முடிவுகளையும், நானே எடுப்பேன். அதற்கான சூழ்நிலைகளை, ஏற்படுத்திக் கொள்வேன். நடந்தவை பற்றி, இனி பேசப்போவதில்லை. இனி நடப்பது நல்லதாக நடப்பதற்கான ஏற்பாடுகளை செய்வேன். என் முழுக்கவனமும், இனி சினிமாவில் தான் இருக்கும். ஒப்புக் கொண்ட படங்களை முடித்துக் கொடுப்பேன். புதிய படங்களுக்கான, "கால்ஷீட் குறித்து, நானே பேசி முடிவு செய்வேன். தெலுங்கில், நான் நடிக்க வேண்டிய படங்களை, முடித்துக் கொடுப்பேன்.  இது குறித்து தயாரிப்பாளர்களுடன் பேசியுள்ளேன்.பெங்களூரில் இன்று, படப்பிடிப்பில், வெங்கடேஷும், நானும் நடிக்கும் காட்சி, படமாக இருக்கிறது என, கூறினர். நான் நடிக்க தயாராக இருக்கிறேன்."ஷூட்டிங் தேதியில் மாற்றமிருந்தால், அவர்கள் விரும்பும் தேதியில், நடித்துக் கொடுக்க தயாராக இருக்கிறேன். மும்பையில் நான் தங்கியிருந்தது குறித்து, பின்னர் தெரிவிக்கிறேன். சென்னைக்கு வருவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.இவ்வாறு, அஞ்சலி கூறினார்.

சித்தி முடிவில் திருப்பம்:"அஞ்சலி பிரச்னையில் இனி தலையிட வேண்டாம் என, சித்தி பாரதிதேவி முடிவு செய்துள்ளதாக தகவல் பரவி உள்ளது.  தங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து, இருவருக்கும் பொதுவானவர்கள் மூலம் பேசி, பிரச்னைக்கு தீர்வு காண முயற்சிப்பதாகவும், இதற்கு பிறகு, சென்னை ஐகோர்ட்டில், அஞ்சலி தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட  ஆட்கொணர்வு மனுவை, பாரதிதேவி, வாபஸ் பெற உள்ளதாகவும், நேற்று மாலை, "கோலிவுட் வட்டாரத்தில், தகவல் வெளியானது.

நமது நிருபர்

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

mayuri - Vadapalani,இந்தியா
17 ஏப், 2013 - 06:37 Report Abuse
mayuri அஞ்சலி அஞ்சலி அஞ்சலி இப்ப கூட்டை விட்டு வெளியேறிய சுதந்திர பறவை என்ஜாய் என்ஜாய் என்ஜாய்
Rate this:
Natarajan Iyer - chennai,இந்தியா
16 ஏப், 2013 - 20:56 Report Abuse
Natarajan Iyer 27 வயதில் இவ்வளவு சோதனையா?
Rate this:
SUJITHA - dgtrtr,சிங்கப்பூர்
16 ஏப், 2013 - 15:43 Report Abuse
SUJITHA ஆல் தி பெஸ்ட் அஞ்சலி டோன்ட் வர்றி iam சுஜிதா யுவர் FR
Rate this:
velliahsubramanian - tirunelveli,இந்தியா
16 ஏப், 2013 - 14:11 Report Abuse
velliahsubramanian ஆல் தி பெஸ்ட்
Rate this:
mathyvalli - Chennai,இந்தியா
16 ஏப், 2013 - 14:04 Report Abuse
mathyvalli ஒருமுறை அனுபவித்தது போதும் அஞ்சலி. இனி கவனமாக காலடி எடுத்து வையுங்க. உங்க விருப்பம் நீங்க தான் பூர்த்தி செய்யலாம். சித்தி நீங்க உழைத்த பணத்தை தருவாங்களா? களஞ்சியம் வைத்து மிரட்டும் ஆபாச படங்களை பத்தி போலீசிடம் சொல்லுங்க. களஞ்சியம் போன்ற கெட்ட மனிதர்களை தண்டிக்க வேண்டும்.
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in