வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‛கோட்' படத்தின் படப்பிடிப்பு தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நேற்று விஜய் கேரளாவிற்கு புறப்பட்டு சென்றார். அப்போது விமான நிலையத்தில் அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டார்கள். அதன் பிறகு படப்பிடிப்பு நடைபெற்ற மைதானத்தை நோக்கி விஜய் புறப்பட்டு சென்றபோது வழி நெடுகிலும் ரசிகர்கள் ‛தலைவா தலைவா' என்றபடி அவரை பின்தொடர்ந்து வந்திருக்கிறார்கள்.
படப்பிடிப்பு நடைபெறும் இடத்தை அடைந்த விஜய், காரில் இருந்து இறங்கியபோது பெரிய அளவில் ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இந்த தள்ளுமுள்ளு காரணமாக விஜய்யின் கார் கண்ணாடி உடைந்து இருக்கிறது. ஒரு வழியாக விஜய்யின் பாதுகாப்பு படையினர் அவரை அங்கிருந்து மீட்டு சென்றுள்ளார்கள். இப்படி ரசிகர்கள் தனது கார் கண்ணாடியை உடைத்த போதும் அது குறித்து எந்த கோபத்தையும் வெளிப்படுத்தாத விஜய், ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு தான் இதற்கு காரணம். அவர்களின் அன்புக்கு நான் தலை வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.