வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் |
அறிமுக இயக்குனர் நாஞ்சில் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ள படம் ‛கா'. இதில் ஆண்ட்ரியா வன உயிர் புகைப்பட கலைஞராக நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆண்ட்ரியா பேசியதாவது: படத்தின் இயக்குனர் நாஞ்சிலுக்கு எனது பாராட்டுக்கள். உயிரை கொடுத்து எடுத்திருக்கிறார். இத்திரைப்படம் குழந்தை மாதிரி. தயாரிப்பாளர் என்ற அப்பாவும், இயக்குநர் என்ற அம்மாவும் ஒத்துழைக்காமல் இருந்திருந்தால் இந்தக் குழந்தையை வளர்த்திருக்க முடியாது.
சில இயக்குனர்கள் தங்கள் படங்களுக்கு சில நடிகைகளை முதலில் தேர்வு செய்வார்கள். பிறகு அந்த நடிகை ஒத்துக்கொள்ளவில்லை என்றால் அந்த நடிகைக்கு பதிலாக இன்னொரு நடிகையை நடிக்க வைத்துவிடுவார்கள். ஆனால் நாஞ்சில் அப்படி இல்லை. இந்தப் படத்துக்கு ஆண்ட்ரியாதான் வேண்டும் என்று அடம்பிடித்தார்.
எனக்கு காடு என்றால் பிடிக்கும். என்னைப் பொறுத்தவரை கோயிலை விட காடு தான் கடவுள், இயற்கை தான் கடவுள். அந்த வகையில் இப்படம் எனக்கு ஸ்பெஷலான படம். இவ்வாறு அவர் பேசினார்.