அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
மலையாளத்தில் சிறந்த பாடல்களை கொடுத்தவர் இசையமைப்பாளர் ஜாஸி கிப்ட். மலையாளத்தில் உருவாகி தமிழில் வெளியான '4 ஸ்டூடண்ட்ஸ்' என்கிற படத்தில் பரத், கோபிகா அதிரடியாக ஆடிப்பாடும் லஜ்ஜாவதியே மற்றும் அன்னக்கிளி நீ வாடி ஆகிய ஹிட் பாடல்களை இசையமைத்தது இவர்தான். இப்போதும் மலையாளத்தில் சீரான இடைவெளியில் படங்களுக்கு இசை அமைத்து வரும் இவர் வெளியிடங்களில் பல இசைக்கச்சேரிகளையும் நடத்தி வருகிறார். அந்த வகையில் கேரளாவில் உள்ள கொளஞ்சேரி என்கிற பகுதியில் உள்ள கல்லூரி விழா ஒன்றில் இவர் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக கலந்து கொண்டார்.
அப்படி அவர் நிகழ்ச்சி நடத்திய போது திடீரென கல்லூரி முதல்வர் மேடை ஏறி அவரிடம் இருந்து பாதியிலேயே மைக்கை பிடுங்கிக்கொண்டு அவரை இறங்கி போக சொல்லி இருக்கிறார். இந்த சம்பவம் கல்லூரி மாணவர்கள் மத்தியில் மட்டுமல்ல திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஜாஸி கிப்ட் கூறும்போது, “நான் பெர்பார்மென்ஸ் பண்ணும்போது என்னுடன் என்னுடைய இசைக்குழுவும் மேடை ஏறி வந்தார்கள். அதை கல்லூரி முதல்வர் ஒப்புக்கொள்ளவில்லை. இப்படி இசை நிகழ்ச்சி நடக்கும்போது இசையமைப்பாளருடன் அவரது குழுவும் மேடையில் பங்கு பெறுவார்கள் என்பதைக் கூட அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. இது போன்ற சம்பவம் வேறு எந்த இசையமைப்பாளருக்கும் நடக்கக்கூடாது” என்று கூறியுள்ளார்.