நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி நடித்துள்ள படம் 'ரோமியோ'. இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் விஜய் ஆண்டனியிடம் படத்தின் போஸ்டரில் நாயகி மது அருந்துவது போன்ற காட்சி இருப்பது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த விஜய் ஆண்டனி, ‛‛குடிப்பது தவறு தான். ஆண், பெண் என்றெல்லாம் இல்லை. நம் நாட்டில் குடி என்பது நீண்ட காலமாகவே உள்ளது. திராட்சை ரசம் என்ற பெயரில் ஜீசஸ் கூட குடித்துள்ளார்'' என்றார். இது வைரலாக தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு விஜய் ஆண்டனிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி விஜய் ஆண்டனி வெளியிட்ட விளக்கம் : ‛‛திராட்சை ரசம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புழக்கத்தில் இருந்தது. தேவாலயங்களிலும் பயன்படுத்தப்பட்டது, இயேசு பிரான் பயன்படுத்தி உள்ளார் என்று கூறினேன். ஒரு பத்திரிக்கை நண்பர் என்னிடம் கேட்ட சில கேள்விகளை தொடர்ந்து நான் பேசியதை இணைத்து தவறாக அர்த்தப்படுத்தியதால் சிலரின் மனம் புண்பட்டுள்ளது. நான் தவறாக எதுவும் சொல்லவில்லை. நீங்களும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். மக்களுக்காக ரத்தம் சிந்தி உயிர் நீத்த, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயேசுவைப் பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது'' என தெரிவித்துள்ளார்.