இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

என்னதான் ஆச்சு, தமிழ் சினிமாவுக்கு… எனக் கேட்க வைத்துவிட்டார்கள். பொங்கலுக்குப் பிறகு கடந்த இரண்டு மாதங்களாக சிறிய படங்கள் மட்டுமே அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பிடும்படியான ஹீரோக்களான தனுஷ், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, சந்தானம் ஆகியோர் நடித்த படங்கள் கூட அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று ஓடவில்லை.
இந்த வருடம் ஆரம்பித்து 75 நாட்கள் ஆக உள்ள நிலையில் குறிப்பிடும்படியான வெற்றி அல்லது வசூல் என்பதே இல்லாமல் இருக்கிறது. இன்னும் 75 நாட்களுக்கும் அப்படியான படங்களும் வராத சூழ்நிலைதான் உள்ளது. தேர்வுகள், ஐபிஎல் போட்டிகள், தேர்தல் என அதற்கு வெவ்வேறு காரணங்கள் உள்ளன.
இந்த இடைவெளியில் சிறிய பட்ஜெட் படங்களை வெளியிட்டு வருகிறார்கள். இந்த வாரமும் அது போன்ற படங்கள்தான் வர உள்ளது. சமுத்திரக்கனி, யோகிபாபு நடித்துள்ள 'யாவரும் வல்லவரே', ஆர்கே சுரேஷ் நடித்துள்ள 'காடுவெட்டி', மாஸ்டர் மகேந்திரன் நடித்துள்ள 'அமிகோ காரேஜ்', அனிஷ், முத்துப்ரியன், மனிஷாஜித் நடித்துள்ள 'ஆராய்ச்சி' ஆகிய படங்கள் மார்ச் 15ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றோடு மலையாளத்தில் வெளியான 'பிரேமலு' படம் தமிழில் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது. இந்தப் படம் ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ள படம். ஏற்கெனவே மலையாளப் படமான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தமிழகத்தில் பெரும் வரவேற்பில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடவேண்டிய ஒன்று.