சமந்தாவை வரவேற்ற கணவர் குடும்பத்தார் | அடுத்தடுத்த ரிலீஸ் : தமிழில் வெற்றியைப் பதிவு செய்வாரா கிரித்தி ஷெட்டி | அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்ட படங்கள் | யோகிபாபு எப்படிப்பட்டவர் தெரியுமா? : சாரா இயக்குனர் பரபர குற்றச்சாட்டு | தியேட்டரில் திரையிட தயங்கியதால் 'சாவு வீடு' டைட்டில் மாற்றம் | ரவிக்கை அணியாமல், சுருட்டு புகைத்து நடித்தது தொழில் நேர்மை: கீதா கைலாசம் | ஜெயிலர் 2வில் ஷாருக்கான் நடிக்கிறாரா? : ஆயிரம் கோடி வசூலை படம் அள்ளுமா? | காந்தாரா கிண்டல்: மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங் | வேள்பாரிக்கு தீவிரம் காட்டும் ஷங்கர் : ஹீரோ யார்? | வதந்திகள் நல்ல விளம்பரம்: கிரிக்கெட் வீரருடன் நெருக்கம் பற்றி மிருணாள் தாக்கூர் |

சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமான ஸ்ரீகுமார், இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் மகன் ஆவார். ஆரம்ப காலக்கட்டத்தில் சினிமாவில் நுழைய அதிக முயற்சிகளை எடுத்த ஸ்ரீகுமார் சினிமாவில் தனது சாதியால் தனக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
அந்த பேட்டியில், 'பல இடங்களில் என் சாதியை வைத்து தாழ்த்தி பேசுவார்கள். ஒரு படத்தில் நடிக்க சென்ற போது என்னுடைய பேச்சை வைத்து இவன் அந்த ஆளுதானே என்று சொன்னார்கள். அருகில் இருந்தவரும் ஆமாம், வேறு வழியில்லாமல் தான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தேன் என்று கூறினார். திறமையை வைத்து இல்லாமல் சாதியை பார்த்து வாய்ப்பு தருகிறார்கள். இப்போதும் சினிமாத்துறையில் சாதி பிரச்னை இருக்கத்தான் செய்கிறது' என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.