உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து உருவாகி உள்ள ‛எலக்சன்' | நடிகை நவ்யா நாயரின் சென்னை நினைவுகள் | அஜித்திற்கு இப்படி ஒரு வினோத பிரச்சனை இருந்ததா ? சுந்தர்.சி கூறிய ஆச்சர்ய தகவல் | அல்லு அர்ஜுன் மீது ஆந்திர போலீசார் வழக்கு | 'சர்பரோஸ்' 25ம் வருடத்தில் 2ம் பாகத்தை அறிவித்த அமீர்கான் | படத்தை ரிலீஸ் பண்ண விடாமல் டொவினோ தாமஸ் தடுக்கிறார் ; இயக்குனர் விரக்தி | குகைக்குள் விழுந்தவருக்கு பிஸ்கட்டால் மேக்கப் ; மஞ்சும்மேல் பாய்ஸ் இயக்குனர் புது தகவல் | ஜிவி பிரகாஷ் - சைந்தவி பிரிவு: குடும்ப பிரச்னை காரணமா? | கெட்ட வார்த்தையுடன் சந்தானம் பட புரோமோ வீடியோ | 2026 தேர்தல் - விஜய், விஷாலைத் தொடர்ந்து சூர்யா ? |
நடிகை வரலட்சுமிக்கும், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் லிக்கோலாய் சச்தேவ் என்பவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதையடுத்து வரலட்சுமி திருமணம் செய்யும் தொழில் அதிபருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்றும், 15 வயதில் ஒரு மகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகின. இது சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் வரலட்சுமி மகளிர் தினத்தில் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், ‛‛மற்றவர்கள் என்னை பற்றி விமர்சிப்பது குறித்து நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. பெண்கள் எப்போதுமே மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் தைரியமாக இருக்க வேண்டும். உங்களுக்காக நீங்கள் வாழுங்கள். இதை செய்யாதே அதைச் செய்யாதே என்று சொல்பவர்கள் யாரும் நம்முடைய வாழ்க்கை முழுவதும் பயணிக்க போவதில்லை. நீங்கள் மட்டும் தான் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு துணையாக நிற்கப் போகிறீர்கள்'' என தெரிவித்துள்ளார் வரலட்சுமி.