ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். கடந்த வருடம் அவர் நடித்து வெளிவந்த 'மார்க் ஆண்டனி' படம் 100 கோடி வசூலித்து வெற்றி பெற்றது. அடுத்து ஹரி இயக்கத்தில் 'ரத்னம்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் சிங்கிளான 'டோன்ட் வொர்ரி டோன்ட் வொர்ரி மச்சி' பாடல் நேற்று வெளியானது.
அது குறித்து விஷால், “எனது சினிமா வாழ்க்கையில் 19 வருடங்களுக்குப் பிறகு கடைசியாக அந்த நேரம் வந்துள்ளது. டார்லிங் தேவிஸ்ரீபிரசாத்துடன் எனது முதல் கூட்டணி. மற்ற நடிகர்களுக்கு ஒரு மேஜிக்கல் பாடலைக் கொடுத்தது போல எனக்கும் தர வேண்டும் என, உன்னை நான் அடிக்கடி எரிச்சலூட்டிக் கொண்டே இருப்பேன். அதற்கு 'டோன்ட் வொர்ரி மச்சி', என உனது பதில் இருக்கும். இப்போது கடைசியாக, வாழ்க்கையின் முரணாக நீ உண்மையில் அதைச் சொன்னாய் என்பது தெரியவில்லை.
'ரத்னம்' படத்தில் நமது முதல் சிங்கிள் 'டோன்ட் வொர்ரி டோன்ட் வொர்ரி மச்சி' ஆச்சரியமானது. எனது வாழ்க்கையை மனதில் வைத்து இயக்குனர் ஹரியும், பாடலாசிரியர் விவேகாவும் இதை எழுதியிருப்பார்கள் என நினைக்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத், “வாவ் வாவ்… என்ன ஒரு அற்புதமான மெசேஜ் டார்லிங் பிரதர் விஷால். நமது முதல் கூட்டணி, மற்றும் இன்னும் அதிகமாக கலக்குவோம். ஆனால், இப்போது நான் 'உனக்கு நன்றி மச்சி' என்று மட்டும் சொல்வேன். இயக்குனர் ஹரி சார், விவேகா ஆகியோருடன் மீண்டும் கூட்டணி சேர்ந்திருப்பது மகிழ்ச்சி. உங்கள் அனைவருக்கும் இந்தப் பாடல் பிடித்து நடனமாடுவீர்கள் என நம்புகிறேன்,” என பதிலளித்துள்ளார்.