மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
லால் சலாம் படத்தை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினி, மகளிர் தினத்தையொட்டி தனது எக்ஸ் பக்கத்தில் கடும் கோபத்துடன் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், புதுவையில் சிறுமிக்கு நடந்த கொடூரம் குறித்து பெண்கள் அனைவரும் சிவபெருமானிடம் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும். இனிமேல் எந்த ஒரு பெண்ணுக்கும், குழந்தைக்கும் இது போன்ற சம்பவம் நடக்க கூடாது. மனித ரூபத்தில் அலைந்து கொண்டிருக்கும் பிசாசுகள் கையில் பெண்கள் சிக்கி சிதைந்து போகக்கூடாது. இது போன்ற கேடுகெட்ட மனிதர்களை கடவுள் கண்டிப்பாக தண்டிக்க வேண்டும். புதுவை சிறுமிக்கு நடந்த கொடூர சம்பவத்தை கேள்விப்பட்டதும் என்னுடைய இதயமே நடுங்கி விட்டது. பலியான சிறுமியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வோம் என்று பதிவிட்டுள்ளார்.